Thursday, May 6, 2010

பேரணிக்கு வரும்போது சாலை விபத்தில் 6 ம.ம.க சகோதர்கள் உயிர் துறப்பு!

குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 சகோதர்கள் மீதான வழக்கு விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரி த.மு.மு.க சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று (மே&5) காலை 11.30 மணியளவில் பேரணி தொடங்கி பர்மாபஜார் அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது ஊட்டியிலிருந்து வந்த தகவல் எல்லோரையும் நிலைகுலைய செய்தது.


பேரணிக்கு வந்துக் கொண்டிருந்த நீலகிரி மாவட்ட ம.ம.க செயலாளர் ஷேக், நகரச் செயலாளர் சாதிக் உள்ளிட்ட 6 சகோதரர்கள் சாலை விபத்தில் உயிரிழர்ந்ததாக வந்த செய்தி நெஞ்சை பதற செய்தது. இச்செய்தி அங்கு இருந்த தலைமை நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே தமிமுன் அன்சாரி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றனர்.


கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ம.ம.க., த.மு.மு.க&வினர் கண்ணீருடன் ஊட்டி நோக்கி விரைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆற்றல் மிகு ஊழியர்களை ம.ம.க இழந்திருக்கிறது அனைவரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு ம.ம.க கோருகிறது.
கரூர் அருகே மயிலம்பட்டி கிராமத்தில் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.


திருச்சி, திண்டுக்கல் நிர்வாகிகள் மருத்துவமனையில் உள்ளனர்.

No comments :