Sunday, May 31, 2009

பரமக்குடி தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவை

பரமக்குடி, மே 28: பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் உடனே மதுரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. இதற்காக இந்த மருத்துவமனை ஆரம்பிக்கும்போது கொடுத்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் பயன்படுத்தும் தேதி காலவதியாகி ஒதுக்கப்பட்டு விட்டது. இதற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழுதாகி மதுரை பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை வரவில்லை.

இந்நிலையில் பரமக்குடி விபத்து மீட்புச் சங்கம், தமுமுக போன்ற தொண்டு நிறுவனங்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் சென்று காயமுற்றவர்களை இலவசமாக உடனே ஏற்றி வந்து மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர்.

மேல்சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்கு டீசலுக்காக ரூ. 1000 வாங்குகின்றனர்.

மக்களின் அவசிய தேவைகளை செய்ய வேண்டிய அரசு இதுபோன்ற முக்கிய தேவையான உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments :