Wednesday, May 6, 2009

கீழக்கரைல விடு விடு வாக்கு சேகரிப்பு






ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து, கீழக்கரை பொறுப்பாளர் , நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் விடு விடு வாக்கு சேகரிப்பு,

கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மூலம் மனித நேய தொண்டுகளை மனிதகுலத்துக்கு சிறப்பாக செய்து வந்தோம். ஜனவரியில் நடந்த கோர விபத்தின்போதும், சுனாமி கொந்தளிப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் சேவை செய்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு எங்கள் அமைப்பினர் ரத்ததானம் வழங்கினர்.

அவசர காலத்திற்கு ரத்தம் தேவைப்படும் போதெல்லாம் முதலில் எங்களை நாடுவதும், முந்திச்சென்று ரத்ததானம் செய்வதும் தமிழ்நாடு முஸ்லீம் முன் னேற்ற கழகமாகும். மனித நேயத்துடன் 1 லட்சத்துக்கும் மேலான ஏழை-எளியவர்களுக்கு மக்கள் தொண்டாற்ற உள்ளோம். மனித நேயத்துடன் செயல்படும் இந்த அமைப்பு மனிதநேய மக்கள் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தொண்டுகள் தொடர தொகுதியில் போட்டியிடும் சலிமுல்லாகானுக்கு ரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள்.



No comments :