Monday, March 4, 2013

சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்


காந்திய வாதி சசி பெருமாள்; உண்ணாவிரத்தை கெடுக்கும் நோக்கோடு காவல் துறை அவரை வலுக்கட்டாயமாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளது.  இந்தஅத்து மீறல் வன்மையாக  கண்டிக்கத்தக்கது   இது தொடர்பாக மம க   தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்  இருந்துவரும் காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை காவல்துரையினர் அத்துமீரலுடன் அவரது உண்ணாவிரதத்தை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டது வன்மையாக கண்டிகத்தகது,
33நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலிவுற்ற பெரியவர் சசிபெருமாலை காப்பாற்றும் நோக்கம் உண்மையிலேயே அரசுக்கு இருந்து இருந்தால் அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்று அவரை இணங்க செய்திருக்கவேண்டும் . அதை விடுத்து பலபிரயோகம் செய்தமை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  கொண்டு வர  அணு தினமும்  பாடுபடும்  மனித நேய மக்கள் கட்சி  சசி பெருமாளின் முயற்சிகளுக்கு என்றும் பெறும் துணையாக இருக்கும்    என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் அரசு சசிபெருமாளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்றும் கேட்டுக்கொள்கிறோம்
ஜே எஸ் ரிபாயி

No comments :