Thursday, March 14, 2013

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் மீன்பிடி துறைமுக‌ம்!முத‌ல்வ‌ர் ம‌ற்றும் எம்.எல்.ஏவுக்கு ந‌ன்றி அறிவிப்பு!

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

நாகை, பழையாறு, பூம்புகார் மற்றும் ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூர் பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். பூம்புகாரில் ரூ.78 கோடியே 50 லட்ச செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், துறைமுகம் அமைக்கும் பணிகளை விரைவாக துவக்க, முதல்கட்டமாக ரூ.6 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழை. இர்பான் வெளியிட்டுள்ள ‌ செய்தியில்,

நீண்ட கால‌மாக‌ இப்ப‌குதி மீனவ ம‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ கூட்ட‌த்தொடரின் போது ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்வும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்று த‌ற்போது ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூரில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அனும‌தியும் நிதியும் வ‌ழ‌ங்கி உத்த‌ர‌விட்ட மாண்புமிகு த‌மிழ‌க முத‌ல‌மைச்ச‌ருக்கும்  ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்க்கும் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் தெரிவித்துள்ளார்.


news by:kilakaraitimes

No comments :