Monday, June 27, 2011

தமுமுக சார்பில் சூளைமேட்டில் ரத்ததான முகாம் நடந்தது


தமுமுக சார்பில் சூளைமேட்டில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி துவக்கி வைத்தார்.

சாளைமேடு அப்துல்லாஹ் தெரு மில்டன் மழலையர் பள்ளியில் நடந்த இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து ரத்த தானம் செய்தனர்.

ஆயிரம் விளக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி, நுங்கம்பாக்கம் காவல் இணை கமிஷனர் தமிழசெல்வன் உள்ளிட்ட பலர் முகாமில் பங்கேற்றனர்

No comments :