கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க பிரதமருக்கு மமக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பிரதமருக்கு அனுப்பியுள்ள தந்தியின் விபரம் வருமாறு.
இராமேஸ்வரத்திருந்து கடலுக்கு 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த படகுகளுக்கு மீன் வலைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை அரசினால் கைதுச் செய்யப்பட்டுள்ள நமது மீனவர்கள் உடனே விடுதலைச் செய்யப்படவும், படகுகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்படவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments :
Post a Comment