Tuesday, April 5, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பிரசாரம்

ராமநாதபுரம்,ஏப். 4: ராமநாதபுரம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா புதுமடம்,தங்கச்சிமடம்,பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக ரத்த தானம், அவசர மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சேவைகளை செய்து வருகிறது மனிதநேய மக்கள் கட்சி. எங்கள் அமைப்பின் சேவையைப் பிரதமரும் பாராட்டியிருக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிரான கட்சியாகவே மனித நேய மக்கள் கட்சி இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதால் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

No comments :