Tuesday, March 22, 2011

ம.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா-விஜயகாந்த் பிரசாரம்: வேட்பாளர் ஜவாஹிருல்லா தகவல்

சென்னை, மார்ச். 22-
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹி ருல்லா, சேப்பாக்கத்தில் மாநில துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாட்சா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி நேற்று மாலை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் பட்டதாரிகள். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்று சிறப்பாக மக்கள் பணியாற்றுவார்கள் என்றார். பின்னர் ராமநாதபுரம் தொகுதி ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம். தேர்தலில் வெற்றி பெற்று தொகுதியிலேயே தங்கி இருந்து மக்கள் பணி யாற்றுவோம். அ.தி.மு.க. கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தேர்தல் புறக்கணிப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும். இலங்கை தமிழர், மீனவர்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் அவர் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

news by: malaimalar.com

No comments :