Tuesday, March 1, 2011
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ரஹிமா கிளை பொதுக் கூட்டம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கடந்த 25-2-2011 வெள்ளிக் கிழமை அன்று சகோதரர் அல்சுவைதி டிராவல்ஸ் அப்துர் ரஹீம் அவர்கள் வீட்டில் மதியம் ஜும்ஆ தொழுகைக்குபின் மதிய உணவுடன் தொடங்கி மாலை 4:00 மணி வரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ரஹிமா கிளை பொதுக் கூட்டம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் கிழக்கு மண்டல நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், கிளை உறுப்பினர்களும், கழகத்தின் அனுதாபிகளும் சுமார் 50 பேர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
1. கிளைத்தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
2. அடுத்து கிழக்கு மண்டலச் செயலாளர் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் நம்முடைய அனைத்து பணிகளும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருக்கவேண்டும் என்றும் அதன் மூலம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை பெறவேண்டும் எனவும் நசீஹத்து செய்ய கூட்டம் தொடர்ந்தது.
3. அடுத்து கிழக்கு மண்டல துணைத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கடந்தகால சேவைகளையும் நமது இலட்சியத்தையும் அதை நாம் அடைந்த விதத்தையும், அரசியலில் நம் நிலைபாடுகளையும், அதற்கு நம்முடைய ஒத்துழைப்புகள் எவ்வாறு அமையவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
4. தொடர்ந்து கிழக்கு மண்டல தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்கள் அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்தும் நமக்கு கூட்டணியில் கிடைத்துள்ள இடங்கள் குறித்தும் மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் தகுந்த பதில்களை கொடுத்தும் பல சந்தேகங்களுடன் வந்திருந்தவர்களின் சந்தேகங்களை போக்கி மனநிறைவுடன் அவர்கள் திரும்பி செல்லும் வகையில் பதிலளித்தார்கள் .
5. இறுதியாக கிளைப் பொருளாளர் டாக்டர் இர்ஷாத் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.களத்தொகுப்பு:
எம். எஸ். ஹமீது.
கிளை மக்கள் தொடர்பு அதிகாரி
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment