Wednesday, March 9, 2011

குவைத் தமுமுகவினரின் அவசரகால இரத்த தானம்

தமுமுக குவைத் மண்டலத்தின் அம்காரா கிளை பொருப்பாளரான திருச்சி மாவட்டம் கொளக்குடி முஹம்மது அலி ஜின்னா அவர்களின் அண்ணனும் தமுமுகவின் உறுப்பினருமாகிய சகோ. முஹம்மது காஸிம் அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக 8 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது.

அதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அல் முபாரக் மருத்துவமனையில் திருச்சி பஜ்லுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் 8 பேர் கொண்ட தமுமுக உறுப்பினர்கள் குழு இரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இரத்தம் கொடுக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திங்கட்கிழமை காஸிம் அவர்களுக்கு அல்அதான் தலைமை மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.

ஆப்பரேஷனுக்குப்பிறகு பூரண சுகமடைந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சகோதரரை தாழையூத்து பீர் மரைக்காயர் அவர்களின் தலைமையில் இரத்தம் கொடுத்த அனைவரும் சென்று சந்திப்பதற்கு திட்டமிட்டனர்.

கடந்த குவைத் விடுதலை தினத்தின் விடுமுறையில் பிப்ரவரி மாதம் 26 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று சகோ. காஸிம் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவரை உற்சாகப்படுத்தினர்.

தமுமுக சார்பாக வந்து சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த அவர் எதிர்வரும் தேர்தல் மற்றும் தமுமுக குவைத் மண்டலம் ஏற்பாடு செய்ய இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments :