Friday, September 17, 2010

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க யூதர்கள்


தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க யூதர்கள்

அமெரிக்காவிலுள்ளயூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதிச் செய்கின்றனர் என சி.ஐ.ஏ/வின் ஆவணங் கள் உறுதிப் படுத்துகின்றன.கடந்த மாதம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ரகசியமாக உளவறிந்து வெளியிட்ட ஆவ ணங்களில் இது தெரிய வந்துள்ளது.ரெட்ஸெல் என்ற சி.ஐ.ஏயின் பிரிவு கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தயாரித்த அறிக்கையில் உள்நாட்டு யூத தீவிரவாதப் பிரிவுகளின் செயல்பாடுகளை அமெரிக்க அரசு கண்டும் காணா ததுபோல் இருப்பதாக குற்றம் சாற்றுகிறது.அமெரிக்க உலகத்திற்கு வெளிப் படுத்துவதுபோல் அமெரிக்கா விலிருந்து ஏற்றுமதிச் செய்யப் படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதமோ, மேற்காசிய, ஆப்பி ரிக்க, ஆசிய வம்சாவழியைச் சார்ந் தவர்களுக்கோ தொடர்பில்லை என சி.ஐ.ஏவின் ஆய்வுகள் குறிப் பிடுகின்றன.ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தீவிரவாதத்திற்கு ஆதரவுத் தெரிவிப்பதும், சில நேரங் களில் தாமே அதனை செயல் படுத்துவதும் அமெரிக்க யூதப் பிரிவினர்களாவர்.இஸ்ரேலின் எதிரிகளுக் கெதி ராகத் தான் இவர்களுடைய காய் நகர்த்தல். உதாரணமாக பரூச் கோல்ட்ஸ்டைன் என்ற அமெரிக்க யூதன் ஈடுபட்ட ஒரு சம்பவத்தை சி.ஐ.ஏவின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.நியூயார்க்கைச் சார்ந்த கோல்ட் ஸ்டைன் கடந்த 1994ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடியேறி கட்ச் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். ஹெப்ரானில் மஸ்ஜிதுல் தொழுது கொண்டிருந்த 29 ஃபலஸ்தீனர்களை கொன்றது இவனுடைய தலைமையிலான பயங்கரவாத குழுவாகும்.அமெரிக்காவைச் சார்ந்த யூத சாமியாரான மெய்ர் கஹானா என்பவர்தான் கட்ச் என்ற யூத பயங்கரவாத இயக்கத்தை தோற்று வித்தவன்.எஃப்.பி.ஐ, சட்ட- ஒழுங்கை சீர்குலைக்கும் இயக்கங்களின் பட்டியலில் உட்படுத்தியுள்ள யூத டிஃபன்ஸ் லீக்கின் (ஜெ.டி.எல்) ஸ்தாபகரும் கஹானாவாகும்.1968 முதல் அமெரிக்காவில் ஜெ.டி.எல்லின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஏழுபேர். 22 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் அமெரிக்க-&அரபு பிரிவினை எதிர்ப்பு குழுவின் மாகாண இயக்குநரை கடத்திச் சென்றது ஜெ.டி.எல் ஆகும்.2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று இரண்டு தினங்கள் கழித்து கலிஃபோர்னியாவில் ஒரு மஸ்ஜிதை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்ட இரண்டு ஜெ.டி.எல் உறுப்பினர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச்செய்ததாக எஃப்.பி.ஐயின் குறிப்பில் காணப்படுகிறது.ஃபலஸ்தீன் பகுதிகளில் தாக்குதல் செயல்பாடுகளுக்கு அமெரிக்க யூதர்களின் ஆதரவு தற்பொழுது பலமடங்கு அதிகரித்துள்ளது.மேற்குகரையிலும், ஜெருசலத்தி லும் சட்டத்திற்கு புறம்பான நிர் மாணங்களுக்காக 40 அமெரிக்க அமைப்புகள் 20 கோடி டாலர் வரியில்லாத நன்கொடையாக சேகரித்து அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கடந்த ஜூலையில் செய்தி வெளி யிட்டிருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

No comments :