Thursday, July 9, 2009
மதுரை தமுமுக அலுவலகத்தில் தீ விபத்து
மதுரை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் மதுரை தெற்கு வாசலில் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று முற்பகல் சரியாக 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இறைவனின் கிருபையால் இந்த தீ விபத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடனே தீ அணைக்கப் பட்டது.
தமுமுக அலுவலகம் அருகே உள்ள கோழிக் கடையில் உள்ள ஒரு மின் இயந்திர கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
எனினும் மாவட்ட நிர்வாகிகள் சீனி, முகம்மது இப்னு, முபாரக் ஆகியோர் உடனே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் மதுரை தெற்குவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment