Thursday, July 17, 2014

லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை

முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வேட்டி அணிவதை தடைச் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகை தாக்கீடு அனுப்பபடும் என்றும் வேட்டி அணிவதை தடைச் செய்யும் மன்றங்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யும் வகையில் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்றும் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முனைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது 'தமிழர்களின் கலாச்சார ஆடையான வேட்டியை தடைச் செய்த கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகையும் வேட்டி கட்டுவதை தடைச் செய்யும் மன்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரிலேயே சட்டமும் இயற்றப்படும் என்ற அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

இந்த சட்டத்தில் முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை காணப்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்

No comments :