Saturday, July 12, 2014

பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்பாவி பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும்,
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும்,

சென்னை உட்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வரும் செவ்வாய் (15.07.2014) அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமுமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலைக் கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், நியாயத்திற்காக குரல் கொடுப்போரும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்குமாறு தமுமுக தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments :