Tuesday, April 22, 2014

நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை

தமுமுகவின்
பத்திரிக்கை அறிக்கை
_____________________________
நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சில மணி நேரங்களுக்கு முன்பு யூடியுப் இணையதளத்தில் நடிகர் விஜய் அவர்களை பற்றி தரக்குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் பேசி உள்ளார் என பலர் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதன்அடிப்படையில் யூடியுப் இணையதளத்தை ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் அவர்களை அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ, இணையதளத்திலோ எழுதவோ, பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். அதுவேறு ஒரு இயக்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த இயக்கத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)

No comments :