Tuesday, December 3, 2013

தமுமுக துபை மண்டலத்தின் இரத்த தான முகாம்







கடல் கடந்தும் தொடரும் மனித நேய பணி

தமுமுக துபை மண்டலத்தின் இரத்த தான முகாம்

துபை அரசின் சுகாதார துறையின் சார்பாக 2:12:2013 திங்கள் அன்று மாலை குளோபல் வில்லேஜில்
இரத்த தான முகாம் நடைப்பெற்றது,இம்முகாமில் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக அதன் தலைவர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இரத்தம் தானம் செய்தனர்,

2:12:2013 திங்கள் அன்று துபையில் பெரும்பாலன சகோதரர்களுக்கு அலவலக பணிகள் இருந்தாலும் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இம்மை மறுமை நன்மைக்காக இம்முகாமில் இரத்தம் தானம் செய்தது குறிப்பிடத்தக்கது,ஆர்வத்தோடு சகோதரர்கள் இரத்தம் தானம் செய்தது கடல் கடந்து வாழ்ந்தாலும் எங்களின் மனிதநேய பணிகள் தொடரும் என்பதையும் உணர்த்தும் விதமாய் இருந்தது,

இம்முகாமில் தமுமுக அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா,மண்டல செயலாளர் அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்,முன்னாள் செயலாளர் மதுக்கூர் சிராஜ்,லெப்பைக் குடிகாடு ஷஹிதுல்லாஹ்,அதிரை அஷ்ரப்,திருப்பூர் கலீல்,கோவை ரியாஸ்,விழுப்புரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜஹாங்கிர், கடையநல்லூர் பாதுஷா,கொள்ளுமேடு ஜாகிர் ஹுசைன் உள்ளிட்ட சகோதரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்,

எல்லா புகழும் இறைவனுக்கே.


No comments :