Sunday, December 8, 2013

கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார



ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா அறிவிக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் சித்தீக் ,செயலாளர் பைசல் அமீன் ,துணை செயலாளர் புஹாரி,ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹிம்,செயலாளர் சேகு தாவுத் சாதிக்,இர்பான்,நாசர்,சலீம்,அபுதாகிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் சிராஜுதீன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கினைப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வழியுறுத்தப்பட்டது, ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு டூவீலர் ஓட்டியவர்களுக்கு பேனா பரிசு வழங்கப்பட்டது.மேலும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

No comments :