Monday, December 30, 2013

தேர்தல் கூட்டணி ஜன.10ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி முடிவு

 மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, நாகை மாவட்டம், சங்கரன்பந்தலில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது

இந்திய துணை தூதர் தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்தபோது மத்திய அரசு அழுத்தமான நடவடிக்கையை எடுத்தது. அதே போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதும் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,600 அறிவித்துள்ளது. அதை உயர்த்தி 4 ஆயிரமாக வழங்க வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

No comments :