Friday, June 21, 2013

கீழக்கரை நகரில் ஜவாஹிருல்லா MLA நாளை (21.06.2013) முகாமிட்டு ஆய்வு - பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என TMMK தகவல் !

இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்கு அடிக்கடி வந்து பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
 
இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரையில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்து ஆவன செய்வார்கள் என கீழக்கரை நகர் த.மு.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments :