Friday, March 2, 2012

இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க சார்பாக கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் சிறு தொழில் செய்வதற்கும் ஆக மொத்தம் ரூ.50000- வழங்கப்பட்டது.

மாவட்ட த.மு.மு.க தலைமைக்கு மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவரின் மருத்துவ உதவிக்காக உதவிகேட்டு மனு கொடுத்திருந்தார். அவரின் மருத்துவ செலவிற்காக ரூ. 10000-மும், இராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்லம் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ 25000-மும் இராமநாதபுரத்தை சேர்ந்த விதவைப் பெண் பாத்திமா என்பவருக்கு சிறுதொழில் தொடங்க ரூ 5000-மும் இரண்டு மாணவர்களின் கல்வி மேற்படிப்பிற்காக ரூ 10000-மும் ஆக மொத்தம் ரூ50000- வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளாளர்.சலிமுல்லாகான் தலைமை தாங்கி மேற்கண்ட நிதிஉதவிகளை வழங்கினார். இதில் த.மு.மு.க மாவட்ட செயலாளா; தஸ்பிக் அலி இ மாவட்ட தொண்டரணி செயலாளர் சாதிக், நகர தலைவர் சுல்தான் மற்றும் மண்டபம் ஒன்றிய பொருளாளர் இபுராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனா;.

இந்நிகழ்ச்சியின் போது ஏப்ரல் 29ல் முஸ்லீம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும் தமிழகத்தில் 7 சதவீதமும் இடஓதுக்கீட்டை வலியுறுத்தி இராமநாதபுரம் ஒன்றியம் மற்றும் நகர் சார்பாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

No comments :