Wednesday, December 30, 2009

கீழக்கரை கடல் பகுதியில் கூட்டு ரோந்து

கீழக்கரை, டிச. 29: ராôமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள தீவுப் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர்.

கீழக்கரை அருகே உள்ள அப்பா தீவு முதல் குருசடை தீவு வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகர் எம். ராஜேந்திரன் தலைமையில், மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பக அறக்கட்டளை அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரப் பதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ரோந்தில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்றும் மற்றும் தீவுப் பகுதிகளில் அன்னியர் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

No comments :