Tuesday, December 15, 2009

நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி

திருநெல்வே­ மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி­ அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.


ஜகாத் நிதியி­ருந்து, ஒரு சகோதரருக்கு தொழிலூ உதவியாக ரூ. 12.000 மும், மருத்துவ உதவியாக இரண்டு நபர்ககளுக்கு தலா ரூ. 3,000மும் வழங்கப்பட்டது.

குர்பானி தோல் வசூல் செய்து ரூ. 30,000த்தில் 7 நபர்களுக்கு தையல் எந்திரமும், ஒரு பெண்ணிற்கு மாவு அரைக்கும் கிரைண்டரும் வழங்கப்பட்டது.

No comments :