بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 17-12-09 வியாழன் இரவு 10.00 மணியளவில் துபை முமுக வின் பொதுக்குழு மற்றும் புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அமர்வின் ஆரம்பமாக முன்னால் செயலளார் கொடுங்கையூர் முஹைதீன் கடந்த இரண்டு வருடமாக இருந்த நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கடந்த நிர்வாகத்தின் சார்பாக விடை கொடுத்தார். அதன் பிறகு அமர்வினுடைய தலைமை பொறுப்பை ஏற்ற அமீரகத் தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் பொறுப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பின் கீழாகவும், அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுஸேன் பாஷா அவர்கள் துபை மண்டலத்தின் கடந்த இரண்டு ஆண்டு கால செயல்பாட்டையும் புதியதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள சகோதரர்கள் தங்களுடைய நிர்வாக செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள். அதன் பிறகு அமீரக தலைவரும், அமீரக துணைத்தலைவரும் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் மெயிலில் இணைக்கப்பட்டுள்ள துபை மண்டலத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள். |
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment