Thursday, January 8, 2015

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அடிப்படை கிளையிலிருந்து மாநில நிர்வாகம் வரைக்கும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என கழக அமைப்பு நிர்ணய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளப்படி வரும்18.01.2015 முதல் 7.03.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறும். 

இதற்காக 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை தலைமை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. பி.எம்.ஆர். சும்சுதீன் அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக ஜெ. அவுலியா மற்றும் இராயபுரம் சிராஜுதீன் ஆகியோர் செயல்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், தேர்தலை நடத்தவும் 33 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 10.01.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு சென்னை இராயபுரத்தில் உள்ள மேஜிக் பார்க் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் நடத்தும் விதம் பற்றி விரிவாக விளக்கப்படும்.

தமுமுக தலைமையகம்

No comments :