Friday, December 19, 2014

தலைமையக அறிவிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே காவல்துறையினரால் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், தேவையின்றி விசாரணை என்ற பெயரால் காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் காவல் நிலைய பதிவேடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் யார் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் அனைவருமே அவ்வப்போது காவல்துறையினரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்பிரச்சனைத் தீர்வு காண சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடவடிக்கைகளை தமுமுக மேற்கொண்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுடைய முழு விவரங்களையும் வரும் 1.1.2015க்குள் தமுமுக தலைமையகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா (9940085358) அவர்களை தொடர்புகொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
- தமுமுக தலைமையகம்

No comments :