Friday, August 16, 2013

த.மு.மு.க ஆர்.எஸ்.மங்களம் கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

67-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை தாலுகா, த.மு.மு.க ஆர்.எஸ்.மங்களம் கிளை சார்பில் “இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ” மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி த.மு.மு.க வும்,அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் (இ.ஆ.ப) அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் சிறப்புரை மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் நிகழ்த்தினார்கள், நிகழ்ச்சிக்கு முன்னிலை மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாணவர் இந்தியா கலந்தர் ஆசிக்,ஒன்றிய பெருந்தலைவர் வ.து.ந.ஆனந்த்,அகில இந்திய தேவர் பேரவை மாநில தலைவர் கணேஷத்தேவர், மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகளும், நகர் தலைவர் மன்சூர்,செயலாளர் ஜமூன்,திருவாடானை ஒன்றிய செயலர் அக்பர் சுல்தான்,பிலால்கனி,சலீம் மற்றும் ஜமாத்தார்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். டாக்டர்.ஞானகுமார் அவர்களின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 50 நபர்களிடம் குருதி சேகரித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய மாவட்ட  தலைவர்  சாதிக் பாட்சா செய்திருந்தார்.

No comments :