அருள் நிறைந்த இந்த இனிய ஈகை திருநாளில் கருணை மிக்க யா அல்லாஹ், இத்திருநாளை அனுபவிக்கும் பாக்கியம் தந்த உன்னிடம் கையேந்தி எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.
அகிலத்தார் அனைவரையும் படைத்த எங்கள் இரட்சகனே! பெருமை, பொறாமை, கர்வம், பேராசை , குரோதம் முதலிய தீய குணங்களிலிருந்து எங்கள் உள்ளத்திற்கு விடுதலை வழங்கி அதற்கு பகரமாக தன்னடக்கம், மன நிறைவு, இறக்கம் மற்றும் அன்பு முதலிய நற்பண்புகளால் எங்கள் நெஞ்சம் நிரம்பி ததும்புவதற்கு உன்னிடம் கெஞ்சுகிறோம்.
உனது நிகரில்லா கருணைக்கு முன் எங்கள் சிரத்தைத் தாழ்த்தி வேண்டுகிறோம். அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பாயாக
ரமளானில் பெற்ற பயிற்சியால் புதிய எழுச்சி பெற்றுள்ள நாங்கள் வரும் காலங்களில் பலம் மிக்க ஈமானுடன் வாழ்வதற்கு உதவிடுவாயாக.
இந்த திருநாளில் உன்னிடம் மன்றாடுகிறோம் யா அல்லாஹ்.
ரமலான் முழுவதும் உன்னை நெருங்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அமைத்து கொண்டோம். உன்னிடம் மன்றாடி இந்த திருநாளில் நாங்கள் சமர்ப்பிக்கும் பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக.
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தகபல்லல்லாஹு மின்னா வ மின்கும்
--எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
No comments :
Post a Comment