Sunday, February 26, 2012

மணி சங்கர் அய்யருடன் ம. ம. க துணைத் தலைவர் சந்திப்பு.

மணி சங்கர் அய்யருடன் ம. ம. க துணைத் தலைவர் சந்திப்பு.

சவுதி அரேபியாவின் கிழக்கு கரை நகரமான தம்மாமில் 23.02.12 அன்று நடைபெற்ற விருந்து வைபவத்தில் ம. ம. க மாநிலத் துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கானும், த.மு.மு.க சவுதி கிழக்கு மண்டலச் செயலாளர் இஸ்மாயிலும் கலந்து கொண்டு அய்யருடன் கலந்துரையாடினர்.

அச்சந்திப்பின் போது, கடந்த 2009 பொதுத்தேர்தலில் ம. ம. க துணையுடன் நின்றிருந்தால், தான் சுலபமாக வென்றிருக்கலாம் என அய்யர் கருத்து தெரிவித்தார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில், த. மு. மு.க குறித்தும், ம. ம.க குறித்தும் காங்கிரஸ் தலைவரிடம் காணப்பட்ட புரிந்துணர்வு எதிர் வரும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதி பலிக்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன், கடந்த 01.02.12 அன்று தம்மாம் வந்திருந்த மத்திய ம்ந்திரி இ. அஹமது அவர்கள், தம்மாம் நகரப் பொருளாளர் பிலால் அவர்களிடம் த.மு.மு.க மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்கள் குறித்து தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத் தக்கது

2014 தேர்தலுக்கு பிரதான கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், த. மு. மு.க -- ம,ம.க வினரிடத்தில், காங்கிரஸ் தலைவர்கள் நெருங்கி வருவது தமிழக அரசியலின் போக்கை மாற்றி அமைக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

-- நமது சிறப்பு செய்தியாளர்.

No comments :