Monday, April 5, 2010

33 சதவீத ஒதுக்கீடு: தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா நெல்லையில் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் உள்ஒதுக்கீடு இல்லாமல் வெறுமனே நிறைவேற்றப்பட்டால் ஏற்கனவே பதவியில் இருக்கிற, மேல்தட்டு வர்க்கத்தினரின் வீட்டுப்பெண்கள்தான் பதவிக்கு வரும் வாய்ப்புள்ளது.

எனவேதான் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும் பயன்பெறும் வகையில் உள்ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறோம்.

உள்ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏப்ரல் கடைசி அல்லது மே மாத துவக்கத்தில் சென்னையில் மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம். அதில் லல்லுபிரசாத், முலாயம்சிங் ஆகியோரை பங்கேற்க செய்ய உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments :