Saturday, June 20, 2009

ஷார்ஜா-வில் இலவச மருத்துவ முகாம்




முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இலவச மருத்துவ முகாம் 19.06.2009, வெள்ளிக் கிழமை அன்று நத்தானி மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமின் தொடக்கமாக மௌலவி.இஸ்மாயில் ஷா அவர்கள் கிராஅத் ஒத, அமீரக முமுக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக-வின் செயல்பாடுகளை எடுத்துரைத்து முகாமை துவக்கி வைத்தார்.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவற்றை கண்டறியும் சோதனைகளும் செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும் இலவசமாகவே தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றை மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர் மருந்தாளுணர் முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான மருந்தாளுணர்கள் கபீர், இல்யாஸ் ஆகியோர் வழங்கினர்.
முகாமின் இறுதியில் மருத்துவர்கள் தீபக் நத்தானி, சௌகத் அலி மற்றும் செவிலியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சார்ந்த நோயாளிகள் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து பகுதியைச் சார்ந்தவர்களும், பாகிஸ்தானியர்களும், பங்களாதேச நாட்டவர்களும் திரளாக வருகைப் புரிந்து பயணடைந்தனர்.
மிகச் சிறப்பான ஏற்பாட்டினை மண்டல பொருளாளர் அபுல் ஹசன் மற்றும் துணைத் தலைவர் குலாம் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர். மருத்துவ சோதனைக்கான வளாகம், உபகரண ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா ஏற்பாடு செய்திருந்தார்.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு முமுக-வினால் அமீரகங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற மருத்துவ முகாம்களால் பொருளாதாரமின்மையால் அவதிப்படுபவர்கள் பயனடைவதாக கலந்துக் கொண்டவர்களின் கருத்தாக இருந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!.

No comments :