Saturday, June 20, 2009

இராமநாதபுரம் தமுமுக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி


ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரத்தில் தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை, மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரையைச் சேர்ந்தவர் ராஜாஉசேன். இவர், மலேசியாவில் விபத்துக்குள்ளானார்.

இவரது குடும்பத்தினருக்கு ரூ. 25000, ராமநாதபுரம் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுவின் கண் சிகிச்சைக்கு ரூ. 8000, வெளிப்பட்டினம் சகுபர் சாதிக்கின் இருதய சிகிச்சைக்கு ரூ. 5000, 6 மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி மொத்தம் ரூ. 12000 உள்பட, ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமைவகித்தார்.

மாவட்டச் செயலர் சாதிக் நிதியுதவியை வழங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர், மாவட்டத் தலைவர் சல்மான் (மேற்கு), நகர் தலைவர் சுல்த்தான், நகர் செயலர் பரக்கத்துல்லா, பொருளாளர் அப்துல்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments :