Wednesday, February 25, 2009

மண்டபத்தில் கல்விக் கருத்தரங்கம்

மண்டபத்தில் கல்விக் கருத்தரங்கம்

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மண்டபத்தில் 21.02.2009 அன்று கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட மாணவரணிச் செயலாளர் அபுல் ஹசன் தலைமை வகித்தார். கர்னல் சேக் அப்துல் காதர். எஸ்.ஆர்.ஏ கம்யூட்டர்ஸ் ஹாஜா அஜ்மீர்தீன். ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலத் துணைச் செயலாளர் பேரா. ஹாஜாகனி சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினார். திரளான மாணவ, மாணவியர்கள் இதில் பங்கேற்றனர்.

தமுமுக மாணவரணியின் கலந்தாய்வுக் கூட்டம் 21.02.2009 அன்று மாலை மண்டபம் பள்ளிவாசல் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. ஆதிக்க சக்திகளின் வியூகங்களும், மாணவர்களின் கடமைகளும் என்ற தலைப்பில் நடந்த இந்த கலந்துரையாடலில் மாநிலத் துணைச் செயலாளர் பேரா. ஹாஜாகனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மாவட்ட மாணவரணியினர் மற்றும் மண்டபம் ரசூல்கான், அன்வர், ஷமிம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments :