Saturday, November 8, 2014

காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு


காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது தெரிந்ததே. 

இந்நிதியை ஜம்மு&காஷ்மீர் மாநில முதல்வரிடம் ஒப்படைப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜம்மு&காஷ்மீர் மாநில தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் முன்னுக்கு வந்துவிட்டதால் மாநில முதல்வரிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஸ்ரீநகர் ஆட்சியரும் துணை ஆணையருமாகிய பாரூக் அஹமதுஷாவிடம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதியாக தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர். 

காசோலை ஒப்படைக்கப்பட்ட பின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

No comments :