மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ராமநாதபுரம் தொகுதியிலே கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து பட்டினக்காட்டான் வரை ஒரு புதிய புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, அந்தப் புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் இருந்ததன் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பழுதுகளை நீக்கி, விரைவிலே அந்தச் சாலையை போக்கு வரத்துக்கு வசதியாக ஏற்படுத்துவதற்கு அமைச்சர் அவர்கள் முன்வருவாரா என்பதை அறிய விரும்புகிறேன்.
திரு. எடப்பாடி கே. பழனிசாமி (மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அந்தச் சாலைகள் எல்லாம் இப்பொழுது ஆய்வில் எடுக்கப்பட்டு சீரமைப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. எடப்பாடி கே. பழனிசாமி (மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அந்தச் சாலைகள் எல்லாம் இப்பொழுது ஆய்வில் எடுக்கப்பட்டு சீரமைப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments :
Post a Comment