Tuesday, December 20, 2011

கீழக்கரையில் த.மு.மு.க. பொதுக்குழு கூட்டம்



கீழக்கரை, டிச. 19: கீழக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றேக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடற்கரை பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல் ஜகரிய அலீம் சிறப்புரையாற்றினார். பின்னர் கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விவரம்:தலைவர் - ஐ.செய்யது இபுராகீம், செயலாளர் - ஹெச்.சீனி ஜகுபர் சாதிக், பொருளாளர் - ஏ.சேக் தாவூத் சாதிக், மமக செயலாளர் - எம்.ஏ.ஹமீது இக்பால், துணைத் தலைவர் - அபுதாகிர், த.மு.மு.க. துணைச் செயலாளர் - புகாரி, மமக துணைச் செயலாளர் - கே.ராஜா ஹுசைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கீழக்கரை வண்ணாந்தரவையில் இயங்கி வந்த மின் வாரிய அலுவலகத்தை கீழக்கரை நகருக்குள் மாற்றியதற்கும், குப்பை கொட்டுவதற்கு இடம் அளித்தும், சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் உதவியாக இருந்த மாவட்ட ஆட்சியர் அருண் ராய், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சித் தலைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் அன்வர் அலி நன்றி கூறினார்.

No comments :