Friday, February 4, 2011

ராமநாதபுரத்தை குறிவைக்கும் மனித நேய மக்கள் கட்சி

ராமநாதபுரம் : அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியி்டப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நலன் மற்றும் அனைத்து சமுதாய மக்களின் நல்லிணக்கத்துக்காக இயங்கி வந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மனித நேய மக்கள் கட்சி துவங்கப்பட்டது. அப்போது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.

பின்பு தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகவே போட்டியிட்டு தமிழகம் முழுக்க ம.ம.க. தனது பலத்தை நிரூபித்தது. தற்போது மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் இம்முறை ம.ம.க. சார்பில் பேராசியர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டால், கட்சித் தலைமை தகுதியான வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கும் என பேராசியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

No comments :