Sunday, September 2, 2012

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.









திணறியது இராமநாதபுரம்..... உடைந்து சிதறியது பொய் வாதங்கள்.......

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.

இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக வின் கோட்டைகளில் ஒன்றாகவும் சக்திவாய்ந்த கழக பணியாளர்களையும் உள்ளடக்கியதாகவும் இருந்துவந்தது. அப்படி தீவிர களப்பணியாளர்களின் ஒருவராய் திகழ்ந்த சகோ.சலீமுல்லாஹ்கான் அவர்கள் தமுமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அவருடன
் சில சகோதரர்கள் உண்மைநிலையை அறியாமல் தாங்களும் சென்றார்கள். இதனை வைத்துக்கொண்டு பொய்யையே மூலதனமாக கொண்டுள்ள ஒரு தக்லீத் கூட்டம் இராமநாதபுரத்தில் தமுமுக ம.ம.க வின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும். தமுமுக ம.ம.க கூடாரம் காலியாகிவிட்டதாகவும் இணையதளங்களில் கூப்பாடு போட்டுவந்தனர்.

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 01-09-2012 சனி மாலை 5.30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் சகோ.சாதிக் பாஷா (தலைவர், மமக இராமநாதபுரம் (கிழக்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர், மமக), பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்), கோவை செய்யது (மாநில செயலாளர், தமுமுக), மைதீன் உலவி (மாநில அமைப்பு செயலாளர், மமக), ஜோசப் நொலஸ்கோ (மாநில அமைப்பு செயலாளர், மமக), மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்பு செயலாளர், மமக), கிதிர் முஹம்மது (மருத்துவ அணி மாநில செயலாளர், தமுமுக) ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்தில் வழக்கத்தை விட மாறாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமுமுகவின் கொள்கை அடலேறுகளும், ம.ம.கவின் மனிதநேய சொந்தங்களும் மற்றும் சமுதாய சொந்தங்களும், மீனவ உறவுகளும் அலைகடலென திரண்டு வருகை தந்தனர். பொதுக்கூட்டமா மாநாடா என்ற சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு மக்கள் வெள்ளம்... இராமநாதபுரம் திணறியது..... அல்ஹம்துலில்லாஹ்......................

பொய் பித்தலாட்டக்காரர்களுக்கு சமுதாய மக்கள் வருகை தந்து சவுக்கடிகொடுத்துவிட்டனர்.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே........ இனி எவர்களின் பருப்பும் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் செல்லாது என நிரூபித்துவிட்டார்கள்........

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

- முத்துப்பேட்டை முகைதீன்


No comments :