Wednesday, August 1, 2012

துபாயில் உயிரிழந்த கீழக்கரை மீனவரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலைமைசெயலாலரை நேரில் சந்தித்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடந்த 23/07/2012 அன்று துபாயில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த மீனவர் சேகர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 கோடி நிவாரண தொகையை அமெரிக்காவிடமிருந்து பெற்று வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (01/08/2012) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு திபேந்திரநாத் சாரங்கி அவர்களை நேரில் சந்தித்து மறைந்த மீனவர் சேகரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டி கோரிக்கை வைத்தார்.

No comments :