கீழக்கரை, ஜூன் 1: கடந்த மே 29-ம் தேதி கீழக்கரை புதிய பஸ் நிலையம் அருகே சலவைத் தொழிலாளிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள 6 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
இத் தீ விபத்தை பார்வையிட்ட எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறியது: கீழக்கரையில் பழுதடைந்துள்ள நூலக கட்டடத்துக்குப் பதிலாக அரசு இடத்தில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும். மேலும் கீழக்கரை தனித்தாலுகா அலுவலகம் அமைய மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
No comments :
Post a Comment