கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா என்பவரின் மனைவியுமான செய்யது அலி பாத்திமா(30) கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது மூத்த பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
news by: keelakaraitimes.com
No comments :
Post a Comment