Friday, August 26, 2011
ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா போட்டோ தெரபி இயந்திரத்தைத் தொடக்கி வைத்தார்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அதை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய போட்டோ தெரபி எனப்படும் இயந்திரம் கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுல்பிகார் என்பவரால் சனிக்கிழமை மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டப் பொருளாளர் முஜிபு தலைமை வகித்தார். நகர் தலைவர் ஹூசைன், கீழக்கரை தமுமுக நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர், புகாரி. சாதிக், இக்பால்.அதிமுக நகர் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா போட்டோ தெரபி இயந்திரத்தைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜவாகிர்ஹூசைன்,ஹசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment