Sunday, July 3, 2011

பரமக்குடியில் தமுமுக சார்பில் கல்வி உதவி (தினமணி)

பரமக்குடி தேவேந்திர மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நோட்டு மற்றும் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, தமுமுக மாவட்டத் தலைவர் மு.சம்சுதின்சேட் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான், மாவட்டச் செயலாளர் சகுபர்சாதிக், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜபருல்லாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் அகமது கபிர் வரவேற்றார். விழாவில், தமுமுக மாநிலத் தலைவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், நகரில் 3 முதல் கல்லூரி வரை படிக்கும் 110 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுகளும், ரூ 1 லட்சம் மதிப்பில் உதவித் தொகையும் வழங்கப்பட்டன. பரமக்குடி கல்வி மாவட்ட அதிகாரி ஜெ.ஆர். ஐசக் சுகிர்தராஜ், எஸ்.டி. கூரியர்ஸ் எஸ்.டி.காசின்முகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், தமுமுக, ம.ம.க நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments :