Saturday, November 22, 2008

டிசம்பர் 6 ம் தேதி ராமநாதபுரம் - பரமக்குடியில் ரயில் மறியல் செய்வது

பரமக்குடி, நவ.19 –

பரமக்குடியில் ஒன்றிய த.மு.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.

மத்திய மாவட்ட பொருளாளர் சல்மான், வடக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, தெற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் சேட் பேசினர். நகர் செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் செய்யது இப்ராஹீம், துணை தலைவர் சாதிக் பாட்சா, துணை செயலாளர் கனி, எமனேஸ்வரம் கிளை தலைவர் இப்ராகிம், செயலாளர் கரீப், பார்த்திபனூர் கிளை தலைவர் முகமது கனி, செயலாளர் சம்சுதீன், பொருளாளர் சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 6 ம் தேதி ராமநாதபுரம் - பரமக்குடியில் ரயில் மறியல் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொண்டரணி செயலாளர் சகுபர் சாதிக் நன்றி கூறினார்.

No comments :