Tuesday, November 18, 2008
கீழக்கரையில் 46 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
கடந்த 09-10-2008 அன்று தமுமுகவின் 46வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுகவின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை தாங்கினார். ஹசன் அலி எம்.எல்.ஏ., இராமநாதபுரம் மத்திய மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான், கீழக்கரை தெற்குத் தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் நல்ல முஹம்மது களஞ்சியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஏ.கே. ஹாலிது புஹாரி (செயலாளர் சீதக்காதி அறக்கட்டளை-சென்னை) நினைவு பரிசு வழங்கப் படுகிறது.இந்த ஆம்புலன்ஸை தமுமுகவிற்காக சீதக்காதி அறக்கட்டளையினர் வழங்கினர். ஏ.கே. ஹாலிது புஹாரி (செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை-சென்னை) ஆம்புலன்ஸை அர்ப்பணித்ததர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment