Wednesday, January 28, 2009

தங்கச்சிமடத்தில் இரத்ததான முகாம்


இராமநாதபுரம் (மத்தி) மாவட்டம் தங்கச்சிமடத்தில் 60வது குடியரசுதினத்தை முன்னிட்டு 26,01.09 இரத்ததானம் முகாம் தமுமுகவின் சார்பில் நடைபெற்றது. இந்த இரத்ததானமுகாமில் 50 பேர்கள் இரத்தானம் செய்தனர். இந்த இரத்தானமுகாமிற்கு மாவட்டத் தலைவர் ச­முல்லாஹ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ரசூல் கான் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தானர்.

நகரத் தலைவர் அபுல் நைனா,செயலாளர் செய்யது அரபு, பொருளாளர் முகம்மது பாதுஷா, து, தலைவர் சுல்தான், து,செயலாளர் இபாதுர் ரஹ்மான் மற்றும் ஊர் ஜமாஅத் தலைவர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் (ம) மாவட்டத்தின் 30வது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :