மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியை ஏற்கவில்லை!
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டது போல சில செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தவறான தகவலாகும். மனிதநேய மக்கள் கட்சிக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளில் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பலம் உள்ளது. இதர தொகுதிகளில் சராசரியாக தலா 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்காளர்களின் ஆதரவு இருக்கிது.
நாங்கள் ஆறு தொகுதிகளை குறிவைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். திமுகவிடமும் நாங்கள் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையடையவில்லை. ஒரு தொகுதியை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே. வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். தேவைப்பட்டால், தனித்து போட்டியிடவும் தயங்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments :
Post a Comment