இலங்கை மாத்தறை பகுதியில் மார்ச் 10 அன்று மீலாது விழா ஊர்வலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசியல் தலைவர்கள், கிறிஸ்த்தவ, பௌத்த மதத் தலைவர்கள் தமிழ் சிந்தனையாளர்கள் என பலரும் கலந்து கொண்ட ஒரு பொதுவான நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே வட இலங்கையில் போரால் அப்பாவி தமிழர்களின் வாழ்வு நிலை குலைந்துள்ள நிலையில், இச்சம்பவம் அதை மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமோ என்று அஞ்சுகிறோம். இலங்கையில் தமிழர்கள், மலையாக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என சகல தரப்பும் அமைதியான முறையில், சமஉரிமையுடன் வாழ துரிதமான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம்.
உண்மையில் இப்பயங்கரவாதத்தை செய்திட்ட சக்தி எது என்பதை கண்டறியும் வரை மாத்தறை தற்கொலை படை தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதி காக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
No comments :
Post a Comment