Saturday, April 25, 2015

நேபாள மக்களின் துன்பத்தில் பங்கேற்கிறோம்! மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று (25.04.2015) நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏராளமனோர் பலியாகியும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதும் பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நேபாள மக்களின் துயரத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கிறது.
இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரும் துயரில் சிக்கியிருக்கும் நேபாள மக்களுக்கு இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(எம். தமிமுன் அன்சாரி)

No comments :