மாவட்டச் துணைச் செயலாளளர் சர்தார் ம.ம.க களக்காடு ஒன்றிய செயலாளர் மைதீன் அலி ஏர்வாடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Thursday, November 5, 2009
ஏர்வாடி கிளையின் சார்பாக தமுமுக உடற்பயிற்சி நிலையம்
மாவட்டச் துணைச் செயலாளளர் சர்தார் ம.ம.க களக்காடு ஒன்றிய செயலாளர் மைதீன் அலி ஏர்வாடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயா
முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் ஒரு திட்டம் செல்வந்த அரபு நாடாகிய கதாரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
லார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்க வுள்ளார்.
இஸ்லாம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதுவும், மேற்கத்திய நாடுகளில் நபிகள் நாயகம் குறித்து நிலவும் தவறான புரிதல்களைப் போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இந்த படத்தின் பின்னணியில் இருக்கும் கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.
இந்தப் படத்துக்கான கதை அடுத்த ஆண்டு தாயாராகும் என்றும் அதற்கு அடுத்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.
நபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்பார்ன் கூறியுள்ளார்.
Tuesday, November 3, 2009
பேராசிரியர் முனைவர் .ஜவாஹிருல்லாஹ் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக உரை
பாபரி மஸ்ஜிதின் ஆரம்ப கால வரலாற்றையும் இந்திய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோர்களுடைய காலத்தில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் தொடர்பான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்கள்.
தற்போதுள்ள வழக்கின் நிலையையும் துபை சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அதன் பிறகு சகோதரர்கள் கேட்ட சமுதாயம் மற்றும் பொதுப்பிரச்சனைகள் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள். ஒன்றரை மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற அமர்வில் பெருந்திரலான சகோதரர்கள் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான கேள்விகளை ஆர்வமுடன்
கேட்டார்கள். இது போன்ற அமர்வுகள் மாதம் ஒரு முறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று துபை முமுக நிர்வாகிகளை கலந்துகொண்ட சகோதரர்கள் அன்புடன் வலியுறுத்தி சென்றார்கள்.
Saturday, October 31, 2009
கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.
Thursday, October 29, 2009
கல்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சிறுபான்மையினர் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய அளவில் வேலை வாய்ப்பு கேட்டு மமக கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
நாள்: 29.10.2009 வியாழன் காலை 11:00 மணிக்கு
இடம்: அணுவாற்றல் நகரின் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு
